Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"முடியாது என்பது மாணவர் அகராதியில் இருக்கக் கூடாது"

 
            "மாணவனுக்கு, அவன் பெற்ற பட்டங்கள் மீதும் மக்களுக்கு அரசு மீதும், பண முதலீடு செய்வோருக்கு நாட்டின் மீதும், நம்பிக்கை இல்லை; இந்த நம்பிக்கையின்மையை போக்க, அனைவரும் பாடுபட வேண்டும்" என மாணவர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

           எஸ்.ஆர்.எம்., பல்கலையின் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று அப்பல்கலையின் வேந்தர் பாரிவேந்தர் தலைமையில் நடந்தது. குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10,290 மாணவ, மாணவியருக்கு, பட்டங்கள் வழங்கி பேசியதாவது:

            நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை செய்யுங்கள். அதேநேரம், தாய் நாட்டின் வளர்ச்சிக்கு, உங்களால் முடிந்த அளவு உதவுங்கள். ஐதராபாத்தை சேர்ந்த, சத்யா நாதெள்ளா, மைக்ரோ சாப்ட்டின், தலைமை அதிகாரியாக உள்ளார். பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால், நான் கூறுவது, மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகுள், போன்ற நிறுவனங்களை, நீங்கள் இந்தியாவில் துவக்கி நிர்வகியுங்கள்.

            உயர் கல்வி கிடைக்காமல், வெளியில் நிற்கும் பல இளைஞர்கள் வாழ்வு முன்னேற, நீங்கள் உதவ வேண்டும். நாளந்தா, தட்சசீலா, போன்ற, உலகப் புகழ்பெற்ற பல்கலைகள் இருந்த நாடு இந்தியா; இன்று, குறைந்த அளவு மாணவர்களுக்கு தான், கல்வி தர முடிகிறது. மாணவர்கள், அறிவு, திறமை, ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவை யாரும் திருட முடியாது. பங்கு போட முடியாது.

            கல்வி, அறிவு, திறமை, ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கும், தனி மனித வளர்ச்சிக்கும் மட்டுமில்லாமல், நாட்டினை அடுத்த கட்டத்திற்கு, கொண்டு செல்ல உதவும்.இது அறிவு சார் உலகம். இதில் நாம் பீடுநடை போட, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். எஸ்.ஆர்.எம்., போன்ற பல பல்கலை.,கள் உருவாக வேண்டும்.

            நம்மிடையே அறிவு சார்ந்தோரும், நிதி உதவி அளிப்போரும் உள்ளனர்; இருந்தும் சில பல்கலை.,கள் மட்டுமே, இந்தியாவில் உருவாகி உள்ளது. இந்நிலை மாற, தனியார் பங்களிப்பு முக்கியம். இந்தியாவில் உள்ள, எந்த பல்கலை.,யும் உலக அளவில் தர வரிசை பட்டியலில் வராதது வருந்தத்தக்கது. நாட்டில், 35 வயதிற்கு குறைவான இளைஞர்கள், 65 சதவீதம். அப்படி இருக்கும்போது, நாம் ஏன் முன்னேறக் கூடாது?

           நாம் முன்னேற, திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.என், 12 ஆண்டுகால ஆட்சி மற்றும் அனுபவத்தில், முடியும் என்பதை பார்த்துள்ளேன். என் அகராதியில், &'முடியாது&' என்ற வார்த்தையே கிடையாது. உங்கள் அகராதியிலும் அப்படி இருக்கும் என நம்புகிறேன். உங்கள் மூளையில் உதிக்கக் கூடிய சிந்தனைகளை, பொருளாக மாற்ற, ஆய்வு செய்ய, குஜராத்தில், தனி பல்கலையை உருவாக்கி உள்ளேன்.

            எதையும், சிறிதாக யோசிக்காதீர்; பெரிதாக யோசியுங்கள். ஜப்பான் புல்லட் ரயில் இயக்க யோசிக்கும் போது, நாம், ரயில் பெட்டிகளின் அளவை அதிகரிக்கிறோம். அறிவு, வேகம், திறமை, ஆகிய மூன்றும் ஒன்றிணைந்தால், வளர்ச்சி அடைந்த இந்தியாவை, நாம் உருவாக்க முடியும். மாணவனுக்கு, அவனுடைய பட்டங்கள் மீதும், மக்களுக்கு அரசு மீதும், பண முதலீடு செய்வோருக்கு நாட்டின் மீதும், நம்பிக்கை இல்லை. இதை போக்க, அனைவரும் பாடுபட வேண்டும். நாம் ஒன்றாக இணைந்து பாடுபடுவோம். இவ்வாறு, அவர் பேசினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive