Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வி உபகரணங்களை தயாரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

            கல்வி உபகரணங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள் தயாரிக்க வேண்டும் என தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
        கடலூர் வட்டத்துக்குள்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 
              உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், உதவி தொடக்க கல்வி அலுவலர் திலகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆசிரிய பயிற்றுநர்கள் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளித்தனர். பின்தங்கிய மாணவர்களின் கற்றல் திறனை இன்னும் அதிகப்படுத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

           இதற்காக ஜனவரி மாதத்துக்குள் கல்வி உபகரணங்களை தயாரித்து அவர்களின் கல்வித் திறனை முழுமையாகப் மேம்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் கடலூர் வட்டத்துக்குள்பட்ட 280 தொடக்க நிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive