Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வளர்ச்சிக்கான தடை


           இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தை மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. விரிவடைந்து வரும் சந்தைக்கு ஏற்ப திறமையான ஆட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுகிறது. பற்றாக்குறை ஒரு பக்கம் இருந்தாலும், பணிக்கு சேரும் நபர்களின் எண்ணிக்கை 1.40 கோடியாக இருக்கிறது.

          வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்பட்டவர்களிலேயே கூட திறமையில்லாதவர்கள் இருக்கிறார்கள், என பல ஆய்வுகள் கூறும் நிலை ஒரு பக்கம் இருந்தாலும், திறன் இல்லாததால் படித்த படிப்புக்கேற்ற வேலையை பெற முடியாதவர்களின் எண்ணிக்கையும் பல மடங்காகப் பெருகி வருகிறது.

           பணிக்கு சேர்பவர்களின் திறன்கள் குறித்து உலகளவில் நடத்தப்படும் ஆய்வுகளை ஒப்பிடும்பொழுது இந்தியாவில் நடத்தப்படும் ஆய்வுகள் மிகவும் குறைவு. அதே நேரம் இளம் பணியாளர்களின் திறனை, பெரும் நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. ஒரு சில நிறுவனங்களுக்கு, இது குறித்த தெளிவான பார்வை இல்லை என்பது மேலும் கவலைக்குரியது.

           இந்திய கல்விமுறை வருடத்திற்கு பல லட்சம் பொறியாளர்களை, வல்லுநர்களை உருவாக்குகிறது. ஆனால் அதில் மிகக் குறைவான சதவிகிதத்தினரே வேலைக்கு ஏற்ற திறன்களோடு இருக்கிறார்கள். இது தான் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்கு பெரும் இடையூறாக இருக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive