Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெங்காயம் விலை உயர்வு: சத்துணவு ஊழியர்கள் கண்ணீர்


           வெங்காய விலை உயர்வால், சத்துணவிற்கு ஒதுக்கப்பட்ட குறைந்த தொகையில், காய்கறிகளை வாங்க முடியாமல், சத்துணவு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.

           முதல் வகுப்பு முதல் உயர்நிலைப் பள்ளி வரை பயிலும் மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்கப்படுகிறது. முட்டை மற்றும் கலவை சாதங்களும் வழங்கப்படுகின்றன. தொடக்கப் பள்ளியில் பயிலும் ஒரு மாணவருக்கு காய் வாங்க 32 காசுகளும், உயர்நிலைப் பள்ளி மாணவருக்கு 36 காசுகளும், சத்துணவு ஊழியர்களுக்கு அரசு வழங்குகிறது.

                இன்று வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கும், மற்ற காய்கள் கிலோ 40 ரூபாய்க்கு குறையாமலும் விற்பதால், அரசு கொடுக்கும் தொகையில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் விறகு, மளிகை சாமான்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள தொகையும் மிகக் குறைவாக உள்ளது. இதனால் சத்தான மதிய உணவு வழங்க, ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

               அரசு தரமான மதிய சத்துணவு வழங்க விலைவாசி ஏற்றத்துக்கு தகுந்தவாறு கூடுதல் தொகையை ஒதுக்க வேண்டும் என்பது தான் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.




1 Comments:

  1. vengaya vilai 10 rupee iruntale vangamatanga.......

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive