அரசு பள்ளிகளில், வரை படங்கள் வாங்கி மாட்டுவதற்கும், ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், "ஸ்மார்ட் வகுப்பறை"
துவக்கவும், முதல்வர், ஜெயலலிதா, அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.
மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் வழியாக, கல்வி கற்பித்து, அவர்களின்
புரிதல் திறனை மேம்படுத்த, &'ஸ்மார்ட் வகுப்பறை&' என்ற புதிய
தொழில்நுட்பத்தை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ்
இயங்கும், 100 மேல்நிலைப் பள்ளிகளில், இந்த ஆண்டு அறிமுகப்படுத்த, முதல்வர்
உத்தரவிட்டு உள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், இப்பள்ளிகளில், ஏற்கனவே இருக்கும் வகுப்பறைகளில்,
ஏதேனும் ஒரு வகுப்பறை, &'ஸ்மார்ட் வகுப்பறை&' ஆக மாற்றி
அமைக்கப்படும். இத்திட்டத்தின்படி கல்வி கற்பிக்க, ஆர்வமுள்ள, இத்துறைப்
பள்ளிகளில், ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்களில், ஒரு பள்ளிக்கு, இரண்டு
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும்,
&'ஸ்மார்ட் வகுப்பறை&' துவக்குவதற்கு தேவையான கம்ப்யூட்டர்
உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்க, 100 பள்ளிகளுக்கு, 5.05 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...