Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆளில்லா உளவு ஹெலிகாப்டர்: எம்.ஐ.டி., மாணவர்களின் கண்டுபிடிப்பு


           சென்னை எம்.ஐ.டி., அண்ணா பல்கலை ஆராய்ச்சி மாணவர்களின் கண்டுபிடிப்பான ஆளில்லா உளவு ஹெலிகாப்டரை போல, தமிழக போலீஸ் துறையில் பயன்படுத்துவதற்காக, மூன்று ஹெலிகாப்டர்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

          எம்.ஐ.டி., அண்ணா பல்கலையின் ஏரோ இன்ஜினியரிங் ஆராய்ச்சி மாணவர்களின் "தக்ஷா" குழுவை சேர்ந்த உதவி பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில், மாணவர்கள் "தக்ஷா" என்ற பெயரில் ஆளில்லா உளவு ஹெலிகாப்டர் கண்டுபிடித்துள்ளனர். இது அமெரிக்க பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி பிரிவு சார்பில் நடந்த கண்டுபிடிப்புகள் போட்டிகளில் பங்கேற்ற 153 நாடுகளில், முதலிடம் பெற்றது.

             உதவி பேராசிரியர் செந்தில்குமார் கூறியதாவது: ஆறு ஆண்டுகளாக செய்த ஆராய்ச்சியின் மூலம் "அன்மேன்டு ஏரியல் வெகிக்கிள்" (ஆளில்லா பறக்கும் வாகனம்) உருவாக்கினோம். இதன் எடை 6 கிலோ. "ரிமோட்" மூலம் இயக்கலாம். அதிகபட்சமாக ஆறு கி.மீ., தூரம் பறக்கும். தொடர்ந்து ஒரு மணி நேரம் பறக்கும் அளவில் பேட்டரி திறன் கொண்டது.

                இதில் சிறிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவிலும் படமெடுக்கலாம். இதன்மூலம், ராமேஸ்வரம் "டிவி" டவரில், உப்புத்தன்மை நிறைந்த கடல்காற்றால் ஏற்பட்ட அரிப்பு தன்மையை, 500 மீட்டர் உயரத்தில் பறக்கவிட்டு, கேமரா மூலம் கண்டறியப்பட்டது. பின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர காவல் படைக்காக உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டது.

               கேதர்நாத் வெள்ளத்தின் போதும் இதை பயன்படுத்தி, எங்கெங்கு ரோடு சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து அரசுக்கு தெரிவித்தோம். திருவண்ணாமலை ஜோதி, மதுரையில் கிரானைட் குவாரி உட்பட பல இடங்களில் ஆளில்லா உளவு ஹெலிகாப்டர் மூலம் போட்டோக்கள் பதிவு செய்யப்பட்டது.

              தெர்மல் "கேமரா" மூலம் காடுகளில் இருட்டில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளையும் கண்டுபிடிக்க முடியும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் அமெரிக்கா ராணுவத்தினர், எங்கள் படைப்பை பாராட்டினர்.

              தமிழக அரசின் உத்தரவுப்படி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில், இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தி, பல இடங்களில் கூடிய கூட்டம், வாகனங்கள் வந்ததையும், அருகில் உள்ள கிராமங்களில் இருந்த நிலையையும் போலீசார் கண்காணித்தனர்.

              போலீஸ் துறைக்கு, இதுபோல் மூன்று ஹெலிகாப்டர் தயாரித்து வழங்க உள்ளோம். சிலநேரங்களில் டாக்டர்கள், விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள், தானம் செய்பவர்களின் உறுப்புகளை கொண்டு வந்தால் காப்பாற்றி விடுவோம் என கூறும்பட்சத்தில், இந்த ஆளில்லா ஹெலிகாப்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

              இந்தியாவில் முதன்முறையாக கண்டுபிடித்துள்ள இந்த ஆராய்ச்சிக்கு தமிழகம் மற்றும் மத்திய அரசு நிதி வழங்கினால், மேலும் விரிவாக்கம் செய்யும் திட்டம் உள்ளது, என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive