Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.


         கடந்த 2012-13 ஆம் கல்வியாண்டில் மட்டும் 50-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

          தமிழகத்தில் 30 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 42 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன. தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 4 ஆண்டுகளில் 670-லிருந்து இப்போது 450 ஆகக் குறைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

            தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புகளை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் வழங்குகின்றன.

             காத்திருப்போர் எண்ணிக்கை 2.70 லட்சம்: தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் படிப்பை முடித்து வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 2.70 லட்சமாக உள்ளது. இவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மற்றும் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறது.

               ஆனால், பள்ளிக் கல்வித் துறையில் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டதால், மிகக் குறைந்த அளவிலான ஆசிரியர்களே இப்போது அரசுப் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு கூட 2 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட உள்ளனர்.

               அரசு வேலைவாய்ப்பு பிரகாசமாக இல்லாததால், இந்தப் படிப்பில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

             ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (ஈபஉதப) (இப்போது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்- (நஇஉதப)) வெளியிட்டிருந்த தகவலின்படி, 2010-11 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 670-க்கும் அதிகமான தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இருந்தன.

               ஆண்டுதோறும் மூடப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைத் தொடர்ந்து இப்போது தமிழகத்தில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 450 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 200-க்கும் கீழே குறையலாம் என ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

                    இந்த ஆண்டு சேர்க்கை அதிகரிப்பு: கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

               குறிப்பாக, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது சுமார் 600 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்துள்ளது.

              ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்டனர். அதன்காரணமாக, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்திருக்கலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

                 இந்த ஆண்டு மொத்தமாக 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பட்டயப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

20 ஆயிரம் இடங்கள் காலி!

             தமிழகத்தில் இப்போதுள்ள 450 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும் தற்போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன.

               இந்த ஆண்டு ஒற்றைச்சாளர கலந்தாய்வு மற்றும் நிர்வாகப் பிரிவு ஒதுக்கீடுகளின் கீழ் 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
 
                   மொத்தம் 33 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் இருக்கும்போது தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மட்டும் இப்போது சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான காலியிடங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive