Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப்-2 தேர்வர்கள் ஆர்ப்பாட்டம்


           நேர்முகத் தேர்வு அல்லாத குரூப்-2 தேர்வு முடிவை வெளியிடக் கோரி, தேர்வெழுதியவர்கள், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

             கடந்த ஆண்டு, நேர்முகத் தேர்வை உள்ளடக்கிய, 1,400 பணியிடங்களுக்கும், நேர்முகத் தேர்வு அல்லாத, 1,000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கும், குரூப்-2 தேர்வு நடந்தது. இதில், நேர்முகத் தேர்வை உள்ளடக்கிய பணியிடங்களை நிரப்ப, அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

                        நேர்முக தேர்வுக்குப் பின், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான தேர்வு முடிவை, இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில், தேர்வு முடிவை வெளியிடக்கோரி, தேர்வர்கள், நேற்று, தேர்வாணைய அலுவலகம் முன், திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

                          "அக்., 15ம் தேதிக்குள், தேர்வு முடிவு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive