Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2009க்கு பிறகு மாநில பதிவு மூப்பில் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் மாவட்டம் இடமாறுதல் பெறலாம்: தடையை விலக்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு


           ஆசிரியர் பணியிடை மாறுதல் தொடர்பாக இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. 

           இதில் 2008-ம் ஆண்டு வரை மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்தனர். இதனால், சில மாவட்டங்களில் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ற வாறு குறைவான நியமனங்களே நடந்தது.
            இதை எதிர்த்து மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் வேண்டி வழக்கு தொடரப்பட்டது. மாநில பதிவு மூப்பை அளித்த போதும் மாவட்ட மாறுதல் இன்றி தீர்ப்பு வழங்கப்பட்டது.

              ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டதால் குறிப்பிட்ட மாவட்டங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற முடியாத நிலை ஏற்பட்டது, இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், 2009-ம் ஆண்டிற்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாவட்ட மாறுதல் தரலாம் என தீர்ப்பளித்தது. 

               மாநில பதிவு மூப்பு பற்றியோ. மாவட்ட பதிவு மூப்பு பற்றியோ இன்று எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மாவட்ட மாறுதல் சம்பந்தமாக இடைக்கால உத்தரவில் உள்ள தடை மட்டுமே இன்று விலக்கிக்கொள்ளப்பட்டது என்றும் அறியப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive