Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

20 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் பட்டியல்: தேர்வுத்துறை சாதனை


          மதிப்பெண் பட்டியலை தொலைத்துவிட்டு, புதிய மதிப்பெண் பட்டியலுக்காக, நீண்ட காலம் காத்திருந்த மாணவர்களில், 20 ஆயிரம் பேருக்கு, ஒரே மாதத்தில், புதிய மதிப்பெண் பட்டியலை வழங்கி, தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது.

             பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை, அதிகம் பேர் தொலைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழ் கேட்டு, தேர்வுத் துறையிடம் விண்ணப்பிக்கின்றனர். புதிய சான்றிதழ் வாங்குவதற்கு, குறைந்தபட்சம், ஒரு ஆண்டாவது ஓடிவிடும். இந்த வகையில், 30 ஆயிரம் பேர், புதிய சான்றிதழ் கேட்டு, விண்ணப்பித்திருந்தனர்.

           கடந்த மாதம், தேர்வுத் துறை இயக்குனராக பதவியேற்ற தேவராஜன், மாதக்கணக்கில், தேங்கிக் கிடந்த விண்ணப்பங்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க, ஏற்பாடு செய்தார். அதன் காரணமாக, 8,464, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களும், 10,697, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களும், மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

             பத்தாம் வகுப்பில், 2,434 விண்ணப்பங்களும், பிளஸ் 2 வகுப்பில், 7,830 விண்ணப்பங்களும், நிலுவையில் இருப்பதாகவும், இந்த விண்ணப்பங்கள் மீதும், விரைவில் நடவடிக்கை எடுத்து, மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பப்படும் என்றும், இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

           இது குறித்து, அவர், மேலும் கூறியதாவது: புதிய மதிப்பெண் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பவர் விவரங்களை, உடனுக்குடன், இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு செய்துள்ளோம். விண்ணப்பிப்பவர்கள், தங்களது பதிவு எண்களை, பதிவு செய்தால், விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

              சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்த விண்ணப்பங்களும், அதிகளவில் வருகின்றன. இவற்றில், வேலைவாய்ப்பு தொடர்பாக கேட்கப்படும் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை, உடனுக்குடன் சரிபார்த்து தர, ஏற்பாடு செய்துள்ளோம். உயர்கல்வி படிப்புகளில் சேர்வோரின் சான்றிதழ்களையும், வேகமாக சரிபார்த்து தர திட்டமிட்டுள்ளோம். அனைத்து சான்றிதழ்களையும், "ஸ்கேன்" செய்து, இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும்.

               இதன் மூலம், உயர்கல்வி நிறுவனங்களோ அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களோ, இணையதளம் வழியாக, சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.

              விடைத்தாள் திருத்தும் பணியை செய்வதற்கு, பொதுவாக, பெரும்பாலான ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதில், பிரச்னைகளும், வேலையும் அதிகம் என்பதால், சீனியர் ஆசிரியர்கள், "எஸ்கேப்" ஆகிவிடுவர். புதிதாக வேலைக்கு சேர்ந்த ஆசிரியர்கள் தான், பெரும்பாலும் மாட்டுவர். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், விடைத்தாளை திருத்தினால், மாணவர்களுக்கு, சரியான முறையில், மதிப்பெண் கிடைக்கும். இதனால், மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் மாணவர் எண்ணிக்கை குறையும்.

              இதை கருத்தில் கொண்டு, வரும் பொதுத் தேர்வில், விடைத்தாள் திருத்தும் பணிகளில், சீனியர் ஆசிரியர்களும், கண்டிப்பாக இடம்பெறும் வகையில், தேர்வுத் துறை, கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

              அதனுடன், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் எண்ணிக்கை குறித்த விவரங்களுடன், அவர்கள், விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைக்கும் போது வர வேண்டும் என்ற உத்தரவாதமும் பெறப்படுகிறது. இதனால், வரும் பொதுத் தேர்வில், சீனியர் ஆசிரியர்கள், "எஸ்கேப்" ஆக முடியாது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive