Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை ஆசிரியர்களுக்கு "திறன் வளர் பயிற்சி"


                தமிழகத்தில், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நாளை முதல், செப்., 11ம் தேதி வரை, "திறன் வளர் பயிற்சி" வழங்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.


                   அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மாணவர்களுக்கு, பாடங்களை எளிமையாக கற்பிக்க, முதுகலை ஆசிரியர்களுக்கு, திறன் வளர் பயிற்சி வழங்கப்படுகிறது. ஏற்கனவே, சென்னையில் பாட வாரியாக பயிற்சி பெற்ற, முதன்மை கருத்தாளர்கள், அரசு ஆசிரியர் பயிற்சி பேராசிரியர்களை கொண்டு, இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

                    வரும், 26, 27ல், ஆங்கிலம் மற்றும் வணிகவியல், கணக்கு பதிவியல்; ஆக., 29, 30ல், கணிதம்; செப்., 2, 3ல், இயற்பியல்; செப்., 6, 7ல், வேதியியல்; செப்., 10, 11ல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.




Related Posts:

1 Comments:

  1. பொருளியல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க அரசுக்கு வேண்டுகோள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!