Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மதிய உணவு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்


           "பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள், 22 பேர் பலியானது போன்ற சம்பவம், மீண்டும் நடக்காமல் தடுக்கவும், குழந்தைகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை, மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
         பீகாரில், சமீபத்தில், மதிய உணவு சாப்பிட்ட, பள்ளிக் குழந்தைகள், 22 பேர் இறந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர் சஞ்ஜீப் என்பவர், மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
             அதில், அவர் கூறியிருந்தாவது: "மதிய உணவு திட்டத்தின் கீழ், பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்கப்படும், மதிய உணவின் தரத்தை மதிப்பீடு செய்யவும், அதை கண்காணிக்கவும், சரியான அமைப்பு இல்லை. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், சுகாதாரமான முறையில் இருப்பதை உறுதி செய்யும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்." இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.
             இந்த மனுவை நேற்று விசாரித்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, சதாசிவம் தலைமையிலான, "பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு: "பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகள், 22 பேர் இறந்தனர். இது போன்ற சம்பவம், மீண்டும் நடக்காமல் தடுக்கவும், மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு அளிக்க, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பதையும், மத்திய, மாநில அரசுகள் அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்." இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive