இரைப்பைப் புற்றுநோய்க்கு, சர்வதேச அளவில், ஒரே
விதமான சிகிச்சை அளிப்பதற்குரிய வழிமுறைகளை வகுக்கும் நிபுணர் குழுவில்,
சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சந்திரமோகன் இடம் பெற்று உள்ளார்.
இரைப்பைப் புற்றுநோய்க்கான சர்வதேச சங்கம் -
ஐ.ஜி.சி.ஏ., சார்பில், இந்நோய் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்ற சர்வதேச
மாநாடு, இத்தாலியில், கடந்த மாதம், 19 - 22ம் தேதி வரை நடந்தது. இதில் 70
நாடுகளைச் சேர்ந்த 1,200 இரைப்பைப் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள்
பங்கேற்றனர்.
இந்தியா சார்பில், சென்னை மருத்துவக் கல்லூரியின், குடல், இரைப்பை அறுவை சிகிச்சை துறைத் தலைவர் சந்திரமோகன், உதவிப் பேராசிரியர் பென்னட் துரைசாமி, முதுநிலை மருத்துவர் மாதேஸ்வரன், ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழு பங்கேற்றது.
இம்மாநாட்டில், 7 ஆய்வுக் கட்டுரைகளும், பேராசிரியர் சந்திரமோகன் தலைமையிலான குழு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஆய்வுக் கட்டுரைகளில், "மரபணு பரிசோதனை மூலம், இரைப்பைப் புற்றுநோயை, வரும் முன் அறிவது உள்ளிட்டவை குறித்து விவரித்து உள்ளோம்," என, சந்திரமோகன் கூறினார்.
இதையடுத்து, இரைப்பைப் புற்றுநோய்க்கு, சர்வதேச அளவில் ஒரே விதமான சிகிச்சை அளிப்பதற்குரிய வழிமுறைகளை வகுக்க, ஐ.ஜி.சி.ஏ., 48 பேர் கொண்ட, சர்வதேச நிபுணர் குழுவை அமைத்து உள்ளது. இக்குழுவில், தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரமோகன் இடம் பெற்று உள்ளார்.
இந்தியா சார்பில், சென்னை மருத்துவக் கல்லூரியின், குடல், இரைப்பை அறுவை சிகிச்சை துறைத் தலைவர் சந்திரமோகன், உதவிப் பேராசிரியர் பென்னட் துரைசாமி, முதுநிலை மருத்துவர் மாதேஸ்வரன், ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழு பங்கேற்றது.
இம்மாநாட்டில், 7 ஆய்வுக் கட்டுரைகளும், பேராசிரியர் சந்திரமோகன் தலைமையிலான குழு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஆய்வுக் கட்டுரைகளில், "மரபணு பரிசோதனை மூலம், இரைப்பைப் புற்றுநோயை, வரும் முன் அறிவது உள்ளிட்டவை குறித்து விவரித்து உள்ளோம்," என, சந்திரமோகன் கூறினார்.
இதையடுத்து, இரைப்பைப் புற்றுநோய்க்கு, சர்வதேச அளவில் ஒரே விதமான சிகிச்சை அளிப்பதற்குரிய வழிமுறைகளை வகுக்க, ஐ.ஜி.சி.ஏ., 48 பேர் கொண்ட, சர்வதேச நிபுணர் குழுவை அமைத்து உள்ளது. இக்குழுவில், தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரமோகன் இடம் பெற்று உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...