Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SSLC - Sup. Exam - Tatkal Apply Starts From 11.6.12 to 12.6.12 upto 12 p.m.




         ஜூன்/ஜூலை 2013, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் சிறப்புத் துணைத்  தேர்விற்குத்  தனித்தேர்வர்களை ‘சிறப்பு அனுமதித்   திட்டத்தின்’ கீழ் தேர்வெழுத அனுமதித்தல்
   
செய்திக்குறிப்பு

    ஜூன்/ஜூலை 2013 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் சிறப்புத் துணைத் தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் Online-ல் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் டீn-டiநே-ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:

1. மார்ச் 2013, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.




2.  மார்ச் 2013, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத தேர்வர்கள் தோல்வியுற்ற / வருகைபுரியாத அனைத்துப் பாடங்களையும்  உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

3. மார்ச் 2013 தேர்வில் பள்ளி மாணவர்கள் மற்றும் நேரடித் தனித் தேர்வர்கள், அறிவியல் பாடத்தில், செய்முறைப் பயிற்சிக்கு  மாவட்ட கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்கள், பதிவு செய்து பயிற்சி வகுப்பிற்கு செல்லாதவர்கள், பயிற்சி வகுப்பிற்குச் சென்று பயிற்சி பெற்று செய்முறைத் தேர்விற்கு வருகை புரியாதவர்கள் என அனைத்து நிலைத்  தேர்வர்களும்     சிறப்பு துணைத் தேர்வுத் திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன்பெற அறிவுறுத்தப்படுகிறது.

4. பழைய பாடத்திட்டத்தில் ஏற்கனவே தேர்வெழுதித் தோல்வியுற்றவர்கள், மார்ச் 2013 தேர்வினை  புதிய பாடத்திட்டத்தில் எழுதி,  அதில் அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சிக்குப் பதிவு செய்யாததால், அறிவியல் பாட கருத்தியல் / செய்முறைத் தேர்வு எழுத முடியாதவர்களும், தற்போது தக்கல் திட்டத்தில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

5. மார்ச் 2013 தேர்வில் ஓரிரு பாடங்களில் மட்டும் தேர்வெழுதி, இதர பாடங்களில் தேர்வெழுதாதவர்களும் / தேர்வுக்கு அனுமதிக்கப்படாதவர்களும்  (அறிவியல் பாடம் உட்பட)  சிறப்புத் துணைத்  தேர்விற்கு  விண்ணப்பிக்கலாம்.

    மார்ச் 2013 தேர்வில் அறிவியல் பாடத்தில் கருத்தியல் தேர்வு மட்டும் எழுதி   செய்முறைத்  தேர்வெழுதாதவர்கள், தற்போது அறிவியல் பாடத்தில் கருத்தியலில் தேர்ச்சி பெற்றிருந்தாலோ   அல்லது    தோல்வி அடைந்திருந்ததலோ,  அவர்கள் ஜுன் 2013 சிறப்புத் துணைத் தேர்வில் கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வு இரண்டினையும்  எழுத வேண்டும்.

Online-ல் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முறை :
    ஜூன்/ஜூலை 2013 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் சிறப்புத் துணைத் தேர்விற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான அறிவுரைகளை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில்  வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி தனித்தேர்வர்கள் தமது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

Online-ல் விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் :

     சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள்  www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில்    11.06.2013 மற்றும் 12.06.2013 நண்பகல் 12 மணி வரை தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்துகொள்ள வேண்டும்.    12.06.2013 நண்பகல் 12.00மணி-க்குப்  பிறகு விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலாது.

தேர்வுக் கட்டணம் :-

    தேர்வுக் கட்டணம் ரூ.125/-
         
    இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500/-ஐ சேர்த்து மொத்தம் ரூ.625/-செலுத்த வேண்டும்.

Online மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட Challan-ஐ மட்டுமே தேர்வுக் கட்டணம் செலுத்த பயன்படுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்த சலானில் குறிப்பிட்டுள்ள தொகையினை    12.06.2013 (புதன் கிழமை)-க்குள் தமிழ்நாட்டில் """"கோர் பாங்கிங்"" சேவை உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு   கிளையிலும் அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் தேர்வுத் தொகையினை செலுத்தலாம். 
(நேரம் :- வங்கியின் விதிகளுக்குட்பட்டது)

Online-ல் பதிவு செய்த பின்னர்  சமர்ப்பிக்கும் முறை :-

        Online-ல் பூர்த்தி செய்து புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் (Confirmation copy ), தேர்வுக் கட்டணம் செலுத்திய SBI வங்கி சலான் தற்போது செய்முறை பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்  மற்றும் மார்ச் 2013-ல் தேர்வு எழுதியதன்  மதிப்பெண் விவரப் பட்டியல் Net Copy நகலினை இணைத்து 18.06.2013   மற்றும்     19.06.2013   ஆகிய இரண்டு நாட்களில் சம்பந்தப்பட்ட, அரசுத் தேர்வுகள் இயக்குநர் மண்டலத் துணை அலுவலகத்தில்  நேரில் சமர்ப்பித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    தபால் மற்றும் தனியார் கொரியர் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக எவ்வித முன்னறிவிப்பின்றி நிராகரிக்கப்படும்.

      ஆன்-லைன் மூலம் இறுதியாகப் பெற்ற  தனித்தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தில் (Confirmation Copy)  சான்றொப்பம் பெறுதல்

    தனித்தேர்வர்கள் ஆன்-லைன் மூலம் இறுதியாகப் பெற்ற தனித்தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய Print Out-ல், மீண்டும் தனித்தேர்வரின்  அதே மாதிரியான புகைப்படத்தினை ஒட்ட வேண்டும்.  தனித்தேர்வர்கள் இவ்விண்ணப்பத்தில், அவர்கள் இறுதியாகப் பயின்ற பள்ளித் தலைமையாசிரியரிடம்  புகைப்படத்தில் சான்றொப்பம் பெறுதல் வேண்டும்.
   
தேர்வு மையம் :
   
    இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் திருநெல்வேலி,  மதுரை கோயமுத்தூர், திருச்சி, கடலுர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். 
   
    தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும்  அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும்,  தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.  மார்ச் 2013-ல் நடைபெற்ற தேர்விற்கு விண்ணப்பிக்காதவர்கள் தற்போது விண்ணப்பிக்கக்கூடாது எனவும் அறிவிக்கப்படுகிறது.
   




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive