Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதல்வரின் முயற்சியால் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்வு: தோப்பு வெங்கடாச்சலம்


            முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் அரசுப்பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கூறினார்.
 
         ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குள்பட்ட சிங்காநல்லூர் ஊராட்சி நத்தக்காட்டு வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்தும், விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கியும் அவர் பேசியதாவது:

          தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முழுமையான வசதிகளை ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தி வருகிறார். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதற்காக பட்ஜெட்டில் ரூ.17,000 கோடி ஒதுக்கியுள்ளார்.அதேபோல தகுதித் தேர்வு அடிப்படையில் 21,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது. முதல்வரின் முயற்சியால் அரசுப் பள்ளிகளின் தரம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.தனியார் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்து கற்பிப்பது போல, அரசு பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.கல்வித்துறையில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என்பதற்காக பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், உலக வரைபடங்கள், வண்ண பென்சில்கள், புத்தகப்பைகள், சீருடைகள், காலணிகள், என அனைத்தையும் வழங்கி வரும் ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டும்தான் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive