Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

679 பள்ளி வாகனங்கள் தகுதிச் சான்று பெற நாளை வரை கெடு


          போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை அடுத்து தமிழகம் முழுவதும் 679 பள்ளி வாகனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
 
       இந்த வாகனங்களில் உள்ள குறைகளை ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜூன் 9) நிவர்த்தி செய்யவேண்டும். இல்லையெனில் இந்த வாகனங்களுக்கு தகுதிச் சான்று (எஃப்.சி.)

         வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

             தொடர் விபத்துகளைத் தொடர்ந்து பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பள்ளி பஸ்களுக்கு மஞ்சள் நிற வர்ணம் அடிக்க வேண்டும். அவசர

                    வழி அமைக்க வேண்டும். அனுபவமுள்ள ஓட்டுநரை நியமிக்க வேண்டும். பள்ளிகள் போக்குவரத்துக் குழுவை அமைக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திலும் உதவியாளர்

                  ஒருவரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விபத்துகளைத் தடுக்கும் வகையிலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்

           அடிப்படையிலும் இந்தக் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் பணியில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

                 இதற்காக கடந்த மே 24-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை (ஜூன் 10) பள்ளிகள்

              திறக்கப்பட உள்ளதால்,அதற்கு முன்னதாக இந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் பள்ளி வாகனங்களில் முழுமையாக பின்பற்றியிருக்க வேண்டும். இல்லையெனில்

வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படாது என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

          இதுகுறித்து போக்குவரத்துத் துறை ஆணையர் பிரபாகர் ராவ் வெள்ளிக்கிழமை கூறியது: பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ளதால், சனி மற்றும்

             ஞாயிற்றுக்கிழமைகளிலும் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். வெள்ளிக்கிழமை வரை தமிழகம் முழுவதும் 2,873 பள்ளி வாகனங்களை அதிகாரிகள்

                ஆய்வு செய்தனர். இதில் 2,194 வாகனங்கள், கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றியுள்ளன. இந்த வாகனங்களுக்கு தரச் சான்றும் அளிக்கப்பட்டுள்ளது.

              679 வாகனங்களில் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றவில்லை. இந்த வாகனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்த வாகனங்கள்

                   அனைத்தும் கட்டுப்பாடுகளை முழுமை செய்யவேண்டும். இல்லையெனில் தகுதிச்சான்று அளிக்கப்படமாட்டாது; வாகனங்களை இயக்க முடியாது என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive