Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு


           சென்னை மருத்துவக் கல்லூரி, எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ள, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி அளித்துள்ளது. திருவண்ணாமலையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கும், எம்.சி.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.
 
           திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி, மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகளின், மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்கள், 2,430 ஆக உயர்ந்துள்ளது.

           நடப்பு, 2013 - 14ம் கல்வியாண்டில், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தற்போது உள்ள, முறையே, 165, 150 இடங்களை, தலா, 250 ஆக உயர்த்திக் கொள்ளவும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கும், மருத்துவக் கல்வி இயக்ககம், எம்.சி.ஐ.,யிடம் அனுமதி கோரியது.

             இதுதொடர்பாக, கடந்த மார்ச் இறுதியில், எம்.சி.ஐ., குழு, இக்கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தற்போதுள்ள, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ள, கடந்த மாதம், 29ம் தேதி, எம்.சி.ஐ., அனுமதி வழங்கியது.

                     தற்போது, சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள, 165 எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக் கொள்ளவும், திருவண்ணாமலையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கும், எம்.சி.ஐ., அனுமதி வழங்கி உள்ளது என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

                 இதையடுத்து, தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, 19 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களை சேர்த்து, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின், மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்கள், 2,430 ஆக உயர்ந்துள்ளது.

                        இவற்றில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீடு போக, மீதமுள்ள, 2,065 இடங்கள், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 இடங்கள் என, மொத்தம், 2,903 எம்.பி.பி.எஸ்., இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

                   ஒரே ஆண்டில், அரசு மருத்துவக் கல்லூரிகளில், 185 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் அரசு மருத்துவக் கல்லூரியின், 75 எம்.பி.பி.எஸ்., இடங்களை, 100 ஆக உயர்த்திக் கொள்ளவும், எம்.சி.ஐ.,யின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive