Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"திறக்கப்படாத சிப்பிகள்" – தமிழ்வழியில் பயின்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் நிலை - Special Article


  • ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர் தேர்வு 2012 க்கான தமிழ் வழியில் படித்து தேர்வு பெற்ற தேர்வர்கள் பணி நியமனம் செய்யப்படாத நிலை குறித்து முழு விளக்கம்
  • 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர் தேர்வு நாளிதழ் மற்றும் டி.ஆர்.பி தேர்வு வாரிய ஆன்லைன் வெப்சைட்டில் வெளியிடப்பட்டது.
  • இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல்,வரலாறு, புவியியல், பொருளாதாரம், வணிகவியல் மற்றும் இதர மொழிகளுக்கு என தேர்வு அறிவிப்பு மொத்தம் 2895 காலியிடங்கள் அறிவிப்பு வெளிவந்த்து.
  • காலி பணியிடங்கள் அறிவிப்பில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் (தமிழ் மற்றும் ஆங்கில பாட பிரிவு நீங்கலாக) முந்தைய ஆட்சியில் வெளியிடப்பட்ட தமிழ் வழியில் பயின்ற மணவர்களுக்க அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை என்ற அரசாணை 69  நாள் 27.05.2009 ன் படி அனைத்து பாட பிரிவுகளிலும் மொத்தம் 390 பணியிடங்கள் இனவாரியாக அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்த்து.
  • தேர்வு மே 2012 ம் மாதம் நடைபெற்றது.
  • ஆகஸ்ட் 2012 ம் மாதம் முதல் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் உட்பட மொத்தம் 3000 நபர்கள் அழைக்கப்பட்டனர்.
  • தமிழ் வழியில் படித்த்தற்கான முன்னுரிமை கோரி சான்றிதழ் சரி பார்ப்பிற்கு அழைத்த நபர்கள் உரிய கல்வி முறையே 10 வகுப்பு, 12 வகுப்பு, இளநிலை பட்டம், முதுகலை பட்டம் மற்றும் கல்வியியல் பட்டம் என  தமிழ் வழியில் படித்த்தற்க்கான சான்றிதழ்  சரி பார்ப்பின் போது கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த்து.
  • இதில் இளநிலை கல்வியியல் பட்டத்திற்கான  சான்றிதழ் அவரவர் பயின்ற கல்லுரி முதல்வரிமோ அல்லது பல்கலைகழகத்தின் உரிய அதிகாரியிடம் பெற்று வர தெரிவிக்கப்பட்டிருந்த்து.
  • மேற்கூறிய படி சான்றிதழ்கள் அனைத்தும் தமிழ் வழியில் பயின்ற தேர்வர்களால் அளிக்கப்பட்டு சான்றிதழ் சரி பார்ப்பு முடிவுற்றது.
  • இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கின் காரணமாக மேற்கண்ட தேர்வு பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்தும் இரத்து செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிட தெரிவிக்கப்பட்டது.
  • உயர் நீதி மன்ற ஆணைப்படி புதிய பட்டியல் வெளியிடப்பட்டது.  அப்போது 6000 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.  அதில் பழைய சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வந்தவர்கள் வர தேவையில்லை என தெரிவிக்கப்பட்டிருந்த்து.
  • இரண்டாவது பட்டியலிலும் தமிழ் வழியில் பயின்றதற்கான முன்னுரிமையுடன் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் முதல் பட்டியலில் தேர்வானவர்கள் பெயரும் இடம் பெற்று இருந்த்து.
  • இந்நிலையில் கடந்த 10.12.2012 ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பில் இறுதி செய்யப்பட்ட தேர்வு பட்டியல் டி.ஆர்.பி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
  • தேர்வு பட்டியலில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் தமிழ் வழி முன்னுரிமை அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட தேர்வாளர்கள் மற்றும் தாரவரவியல் பாடப் பிரிவு தேர்வாளர்களை தவிர மற்றவர்கள் தேர்வு பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டது.
  •  இது குறித்து அடுத்த நாள் செய்திதாள்களில் தமிழ் வழியில் படித்த நபர்கள் போதுமான அளவு அனைத்து பிரிவுகளிலும் இல்லாத்தால் அது குறித்து முடிவு செய்த தேர்வு முடிவு பின்னர் வெளியிடுவதாக டி.ஆர்.பி அறிவித்த்து.
  • ஆனால் காலம் கடந்தது. தேர்ச்சி பெற்ற 2300 நபர்களுக்கு மட்டும் கலந்தாய்வு கூட்டம் நடத்தி மாண்புமிகு முதல்வர் அவர்களின் கரத்தினால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
  • அதன் பின்னர் எந்தெந்த பல்கலைகழகங்கள் தமிழ் வழி கல்வியை நடத்தி வருகிறது என்ற விபரம் அறிய அந்தந்த பல்கலைகழகங்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் அந்த விபரங்கள் பல்கலைகழகங்கள் அளித்த பின்பு தேர்வு முடிவு வெளியிடப்படுவதாக தமிழ் வழியில் தேர்வு பெற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.  தாவரவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு வழக்கு உள்ளதால் வழக்கு முடிவுற்ற பின் வெளியிடப்படும் என்றும் செய்தி நாளிதழில் தெரிவிக்கப்பட்டது.
  • ஆனால் 18.01.2013 அன்று டி,.ஆர்.பி இரண்டாம் பட்டியல் ஒன்று வெளியிட்டது.  அதில் முதுகலை அறிவியல் பிரிவு பாடங்களில்  தமிழ் வழியில் இல்லை படிப்பு இல்லையெனவும் ஆனால் வணிகவியல், பொருளாதாரம், மற்றும் வரலாறு பாடங்களில் உள்ளதாகவும் எனவே சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு பின் தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த்து.
  • தற்போது 27.03.2013 அன்று தாவரவியல் பாடப்பிரிவு தேர்வு பட்டியல் சென்னை டி.ஆர்.பி அலுவலக பலகையில் வெளியிடப்பட்டது. ஆனால் தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்களுக்கான பணியிட தேர்வு பட்டியல் வெளியிடப்படாமல் இருந்தது.
  • தற்போது இளநிலை கல்வியியல் பல்கலைகழகத்திடம் தமிழ் வழியில் பாடம் நடத்தப்பட்டதா? என்று டி.ஆர்.பி சான்று கேட்கப்பட்டதாகவும் அதற்கு பதில் வந்தவுடன் தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என்றும் நேரிடையாக தேர்வர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
  • என்ன காரணத்தினால் தேர்வர்களுக்கு சான்றிதழ் அளிக்கவில்லைஎன தமிழ்நாடு கல்வியியல் பல்கலைகழகத்தின் அதிகாரிகளிடம் தேர்வர்கள் விசாரித்த போது அவர்கள் கூறியதாவது - தமிழகத்தில் எந்த தனியார் கல்லுரியும் தமிழ் வழியில் கல்வியியல் நடத்த அனுமதி கேட்கவும் இல்லை அதனால் அனுமதி வழங்கவும் இல்லை. தற்போது இது போன்ற சட்டத்தினால் தான் இந்த வருடத்தில் இருந்து நாங்கள் ””தமிழ் வழி கல்வி”” என்று தனியே வழங்குகிறோம் எனவே அதற்கு முன்னர் பயின்ற அனைவரும் ஆங்கில வழியாகவே கருதப்படுவர் என தெரிவித்துள்ளார்”.
  • உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கூட இதற்கு முன் மாணவர்கள் எவருக்கும் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றுகளை வழங்கவில்லை. காரணம் அதற்கு தேவை ஏற்படவில்லை என்பது தான் உண்மை. ஆனால் இந்த புதிய இட ஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வந்ததும் மாணவர்களின் நலன் காக்க பள்ளிகள் அனைத்தும் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை வழங்கி உள்ளது. இதேபோல் உரிய பல்கலைகழகங்களும் மாணவர்களின் நலன் கருதி தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றினை வழங்க வேண்டும் என தேர்வர்கள் பலகட்டமாக முயற்சி செய்து வந்தனர்.
  • ”தேர்வர்கள் பயின்றது தமிழ் வழியில் தான், தமிழ் பள்ளிகளில் தான் ஆசிரியர் பயிற்சி எடுத்தோம், கல்லுரி பதிவேடுகள் அனைத்தும் தமிழில் தான் எழுதி உள்ளோம்.  இந்த நிலையில் தங்களால் நடத்தப்பட்ட கல்லுரி தேர்வுகளுக்கும் தமிழ் வழியில் தான் வினாத்தாள் இருந்த்து, மேலும் நாங்கள் தமிழில் தான் தேர்வு எழுதி தங்களால் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு பெற்றதாக அறிவிப்பு கொடுத்துள்ளீர்கள்”  என விளக்கங்களை கூறியும் முயற்சி செய்து வந்துள்ளனர்.
  •  தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண் W.P.No.25835 of 2012 ன் படி தமிழ் வழியில் தேர்வுகள் அனைத்தும் எழுதியிருந்தாலே அவர் தமிழ் வழியில் பயின்றதாகவே கருத வேண்டும். என உத்திரவு வழங்கியுள்ளது.
  • பாடம் பயிற்றுவித்த கல்லுரிகள் தமிழ் வழியில் பாடம் பயின்றதாக தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளன.  ஆனால் பல்கலைகழங்கள் தர மறுத்ததால் தமிழ் நாட்டில் பி.எட்டில் - தமிழ் வழி கல்வியே இல்லை எனும் நிலை ஏற்பட்டது.
  • தற்போது டி.ஆர்.பி யால்  9.5.2013 அன்று புதிய முதுகலை ஆசிரியர் தேர்வு 2881 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு என 20 சதவீதம் ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 400 இடங்கள் வரை அறிவிப்பு வரப்பெற்றுள்ளது.
  • இந்த நிலையில் மீண்டும் 3வது முறையாக தமிழ் வழி முதுகலை பட்டதாரிகளின் அடுத்த கட்ட பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 23,24 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சாிபார்ப்பு செய்யப்பட இருக்கிறது. முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் தற்போது உரிய சான்றிதழ்களை பல்கலைகழகத்திடம் இருந்து பெற்று இருந்தால் அவர்கள் ஏப்ரல் 27 ஆம் தேதி நேரிடையாக டி.ஆர்.பி அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் ஒரு மிகப்பெரிய நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. டி.ஆர்.பி அதிகாரிகள் மற்றும் தேர்வர்களின் தொடர் முயற்சி காரணமாக சென்னை பல்கலைகழகம், தமிழ்நாடு இளநிலை கல்வியியல் பல்கலைகழகம், பெரியார் பல்கலைகழகம் போன்ற பெரும்பாலான பல்கலைகழகங்கள் முதன் முதலில் தேர்வாகியுள்ள தேர்வர்களும் தமிழ் வழியில் பயின்றுள்ளார்கள் என சான்று வழங்க ஒப்புக்கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இவ்வாறு உரிய சான்று பல்கலை கழகத்தால் வழங்கப்படுமாயின் முதல் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கே நிச்சய பணி வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உள்ளது.
  • அப்படியானால் ஏப்ரல் 23, 24 ஆம் தேதிகளில் சரிபார்ப்பில் கலந்துகொள்பவர்களின் நிலை ஏமாற்றமாகி விடக் கூடாது. மற்ற பாடங்களில் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கு இரண்டாம் கட்டமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஆணை வழங்கியது போல் இதுவரை நடந்துள்ள மற்ற சான்றிதழ் சரிபார்ப்புகளில் கலந்து கொண்டு உரிய தகுதியுடன் சரியான சான்றிதழ்களை சமர்பித்த (தாவரவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட) அனைவருக்கும் பணி ஆணை வழங்க வேண்டும் என்பதே தேர்வர்களின் விருப்பமாகும். அதுவே பாடசாலையின் விருப்பமும் ஆகும். விரைவில் அனைவருக்கும் பணி கிடைக்க வாழ்த்துக்கள்.





11 Comments:

  1. Thanks to padasalai
    we are waiting for good results
    by
    cv missing remaining 3000 candidates

    ReplyDelete
  2. Next PG exam announce paniyachu. Second cv2 list la ullavargaluku meendum vaaippu yappadi kidaikum.?

    ReplyDelete
  3. We r also waiting for the good result. R u thinking still we have a chance? Trb announced next exam is it possible? Cv candidates case potrukangla? What is the result 4 tat?

    ReplyDelete
  4. PG Science ku Tamil Medium Reservation fill pannitangala? illaya?

    ReplyDelete
  5. Dear Padasalai author

    Missed CV1 and CV2 candidates are very painful. we are jobless. please ask to consider the our feelings.

    ReplyDelete
  6. sir,
    thx a lot for sharing our feeling

    reg

    senthil

    ReplyDelete
  7. Respected padasalai aasiriyar avarkalukku,we botany people are so grateful to you.Because before this you gave voice for us by the article KARUGUM THAVARAM .Likewise now also we all in pain evenafter we got the final selection list.after other candidates those who wrote exams with us they have joined in job on jan 2.But even now we dont know about our counseling.we have no way or we dont know where to get the solution.only 10 days are there for the school opening we are in the confusion whether we are the govt. school teachers or the priv.teachers.Because we are in the crucial period that we have to give confirm relieving letter within this 10 days otherwise if we are going to govt., school or not they will send out us.if one month salary is not there that month will be ????????????????????? to us.what shall we do sir?when we have counseling?when can we join in job?pls.,pls.,pls., if you knosw about this please inform to us

    ReplyDelete
  8. Lot of thanks to padasalai authour and padasalai team members and padasalai viewers

    ReplyDelete
  9. Very thanks to padasalai author
    but I cant know about why did trb not publish botany result in the website
    plse tell some useful information for us.

    ReplyDelete
  10. what about science tamil medium candidates

    ReplyDelete
  11. PG science tamil medium postings all are filled if have doubt contact to trb enquiry number this is true dont waste time to wait for next list it doesnt happened so try to understand real situation all the best for next trb exam prepare well.... dont be dreamer be practical... we have knowledge so we will prove once again with high mark that is the gud and correct way...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive