Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி? - Poll Related Article.


வாசகர்களே தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து, இக்கட்டுரை ஆரோக்கியமான விவாதமாக அமைய ஒத்துழையுங்கள்.

( நினைவில் கொள்ளுங்கள் - இன்று பிற்பகல் 9 மணியுடன் வாக்கெடுப்பு முடிவடைகிறது )

அன்பான பாடசாலை வாசகர்களே,
  • ஆங்கில வழிக்கல்வி திட்டதின் மூலமாக அரசுப்பள்ளிகளில் எந்தளவிற்கு சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
  • ஆங்கில வழிக்கல்வி எனும் ஒரு காரணம் மட்டுமே கிராமத்து பெற்றோர்களை சுண்டியிழுத்து விடுமா? 
  • இத்திட்டத்தால் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
  • கிராமத்து மாணவர்கள் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுமா?
  • அடுத்த தலைமுறை குழந்தைகள் தமிழ் மொழியை மறந்து விடுவார்களா?
  • இத்திட்டத்தால் அதேபள்ளியில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு தாழ்வு மணப்பான்மை ஏற்படுமா?
       இவ்வாறு நாம் விடைகாணவேண்டிய பல வினாக்களில் சில மட்டுமே நாம் இங்கு எடுத்துக்காட்டியுள்ளோம்.


           
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி?
சேர்க்கையை அதிகரிக்கும்.
தமிழ் மொழிக்கு பாதிப்பு
தேவையற்றது.

             வணக்கம். தற்போது நம் தமிழக அரசு தமிழ் வழி கல்வியுடன், தேவை ஏற்படும் பல்வேறு பள்ளிகளிலும் படிப்படியாக ஆங்கில வழிக் கல்வியையும் நடைமுறைப் படுத்தி வருகிறது.

               இது குறித்து பொதுமக்களை காட்டிலும் களத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அதிகபடியான புரிதல் அவசியம். அதற்காகவே நாம் நமது வலைதளத்தில் கீழ்கண்டவாறு 16.05.2013 வரை வாக்கெடுப்பு நடத்துகிறோம்.


     எனவே அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கொண்டுவருவதில் உள்ள சாதக பாதகங்களை தாங்கள் பட்டியலிடலாம். இத்திட்டம் மேலும் சிறக்க தங்கள் ஆலோசனைகளையும் நமது வலைதளத்தில் பதிவு செய்யலாம்.

           இதன் மூலம் நமது வலைதளத்தை பார்வையிட்டுவரும் பல்வேறு கல்வியாளர்கள் மூலமாகவும், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மூலமாகவும் தங்களின் சிறந்த ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட அரசிடம் கோரிக்கை வைக்க வாய்ப்பு ஏற்படும்.

எனவே அனைவரும் வாக்களியுங்கள்.

தங்கள் கருத்தை கீழே உள்ள  Comment Box ல் பதிவுசெய்யுங்கள்.

நன்றி!
    
- அன்புடன் பாடசாலை.




29 Comments:

  1. Tamilaga arasu kondu vanthullu intha mudivu sariyanathu.aanal nam teachersku muthil payirchi alikkapadavendum.

    ReplyDelete
  2. Ella schoolkum vendam students athigama ulla school ku mattum kondu varalam!, below 20 students ulla schoola sariya varuma?

    ReplyDelete
  3. ABL method la english medium kond vanthal ithu waste, book method mattumey vetri adayum.

    ReplyDelete
  4. this is a good decision.....but some schools have more than 50 students with 2 teachers.....if english medium starts who teach in tamil medium and who teach english medium.....then HM goes to office ...who will teach these lessons......if this decision comes to ABL method ,it fails....also some schools have 10 or below students in all the 5 classes.it works these schools successfully......

    ReplyDelete
  5. yes this is correct.

    ReplyDelete
  6. அரசுப் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளில் தோராயமாக 80% ஏழைகளின் வீட்டுக் குழந்தைகள். ஆகவே கட்டிட வசதி, மாணவர்களுக்கான இருக்கை வசதி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகளில் நடைமுறைபடுத்தினால் சிறப்புடன் செயல்பட வாய்ப்புக்கள் அதிகம். ஏழை வீட்டுக் குழந்தைகளும் பலனடையும்.

    ReplyDelete
  7. Nammudaida Tamilnadu kalviyilum mudhalidam vakika vendum endral intha thittathai arasu kondu vara vendum...But one condition first of all teachers must known English knowledge and how to take easily understand for students

    ReplyDelete
  8. Pre.KG,LKG,UKG, kondu vanthal mattumey ithu sathiyamagum. Because village studentsku ippa irukura 1std english book harda iruku, athanala LKG,UKG must in govt schools,itharku kinder garten teachers'a appointment pannalam.

    ReplyDelete
  9. Training endra peyaril teacher'skalai torcher seya vendam, trainingkaga selavidum amount school, nalathitangaluku use pannalam!

    ReplyDelete
  10. ஆங்கில வழி கல்விக்கு நல்வரவு. ஹிந்தி எதிர்பாளர்களால் ஹிந்தியை இழந்தோம். இதே வழியில் ஆங்கில வழிக் கல்வியை இழக்கவேண்டாமே? மாற்றங்கள் மூலமே மனித குலம் இன்றைய நிலையை அடைந்துள்ளது. நல்ல மாற்றங்களை வரவேற்போம். பூங்கொடி. திருப்பூர்

    ReplyDelete
  11. nalla thittam sir varavearpom

    ReplyDelete
  12. tamizhuku mukkiyathuvam kodungal sir pls

    ReplyDelete
  13. திரு. நவீதன் ஐயா அவர்களுக்கு,

    இங்கு யாரும் தமிழின் முக்கியத்துவத்தை குறைக்கவில்லை. தமிழுடன் தேவைப்படுபவர்கள் ஆங்கில வழியையும் பயில்வதற்கு அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பையே அரசு வழங்கியிருக்கிறது.

    தமிழ்! தமிழ்! என முழங்கும் நீங்கள் உங்கள் பிள்ளைகளை மட்டும் ஆங்கில வழியிலும், இந்தி மொழியையும் கற்று தருகிறீர்களே. பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட உலகில் உங்கள் மகன் மட்டும் வெளி மாநிலத்திலோ, வெளி நாட்டிற்கே சென்று உயர் பதவியில் சம்பாதிக்க வேண்டும். அரசு பள்ளியில் பயிலும் அறிவாளி மாணவர்கள் கூட பாவட்பட்ட ஏழை மக்களின் பிள்ளைகள் எனும் ஒரே காரணத்தால் தமிழ் மொழியை மட்டுமே பயின்று தமிழ் நாட்டில் மட்டுமே குதிரை ஓட்ட வேண்டுமா என்ன?

    தமிழ் அழிந்து விடும் என வாதிடுபர்கள் எல்லாம் ஏன் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் தமிழில் பயில வேண்டும் என கட்டாயப்படுத்துகிறீர்கள். அனைத்து தனியார் பள்ளிகளையும் தமிழ் வழி கல்வியாக்க வேண்டியது தானே?

    இறுதியாக ஒரே கேள்வி?

    உங்கள் மகன் எந்த வழியில் பயில்கிறான்?

    ReplyDelete
  14. Correct Sir, Ivanga ellam ippadithan, govt schools la mattum thamil kathu koduthu tamila valappanga. aana ivanga pasangala mattum CBSE la padikka vaippanga. marungappa...

    ReplyDelete
  15. அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி முடிவை கைவிட வேண்டும்: வைகோ கோரிக்கை

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, தமிழ்வழிக் கல்விக்கு வேட்டு வைத்து, அன்னைத் தமிழ் மொழிக்கு பேராபத்தை ஏற்படுத்துவது ஆகும். வளர் தலைமுறை குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தமிழ்மொழியில் பயில்வதைவிட்டு, ஆங்கில மொழியில் பயில்வதற்கு ஊக்குவிப்புத் தந்து 'மெல்லத் தமிழ் இனி சாகும்; மேலை மொழியே இங்கு ஓங்கும்' எனும் பெரும் விபரீதத்துக்கு தமிழக அரசின் முடிவு வழிவகுக்கும்.

    கடந்த கல்வியாண்டில், 320 அரசுப்பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டன. மொத்தம் 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு 22,400 மாணவர்கள் படித்து வருகின்றார்கள். வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பு தமிழுக்கும், தமிழ் பயிற்சி மொழிக்கும் பெரும் கேடு செய்யும்.

    அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளை ஆங்கிலவழிப் பிரிவுகளாக மாற்றும் அறிவிப்பை எதிர்க்கிற அனைவரும் ஆங்கில மொழிக்கோ ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக் கொள்வதற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

    அண்ணல் காந்தி முதல் அறிஞர் அண்ணா வரை தாய்மொழியில் கல்வி பயில்வதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.

    தாய்மொழியை முதல் பயில்மொழியாகக் கொள்வதும் அதையே அனைத்துப் பாடங்களுக்குமான பயிற்றுமொழியாகக் கொள்வதும்தான் உலக நடப்பு. இரண்டாம் மொழியாக வேறொரு அயல்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெறலாம். நம்மைப் பொறுத்தவரை இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்போம், கசடறக் கற்போம் என்றுதான் சொல்கிறோம்.

    தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்கள் யாவரும் ஐந்தாம் வகுப்புக்குப் பிறகுதான் ஆங்கிலம் கற்றார்கள் என்பதே உண்மை. இதனால் அவர்கள் யாரும் ஆங்கில அறிவில் குறைந்துபோய் விடவில்லை.

    தனியார் பள்ளிகளோடு போட்டியிட்டு அரசுப் பள்ளிகளும் மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் பயிற்று மொழி என்பதை ஏற்பதற்கில்லை. அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க விடாமல் தடுப்பது எது? தமிழ்ப் பயிற்றுமொழிதானா?

    இங்கிலீஷ் மீடியம் வேண்டும் என பெற்றோர் விரும்புகிறார்கள் என்று பொதுமக்கள் மீது பழியைப் போடாமல், தமிழ்வழிப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தொடக்கப் பள்ளியில் மட்டுமல்லாமல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், ஏன் கல்லூரிப் படிப்பிலும் கூட, தமிழையே பயிற்றுமொழியாக்குவது போன்ற உருப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.

    அரசுப் பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கேரளத்தில் மலையாள வழிக் கற்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் தனி மதிப்பெண் கொடுப்பது போல் இங்கேயும் தமிழ்வழிப் படித்தவர்களுக்குப் பல சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும்.

    கடந்த 1998ஆம் ஆண்டு தமிழ்ச் சான்றோர் பேரவை முனைவர் தமிழண்ணல் தலைமையில் நடத்திய 102 தமிழுணர்வாளர்களின் உண்ணாவிரதப் போரட்டத்தின் முடிவில் அன்றைய தமிழக அரசு நீதிபதி மோகன் தலைமையில் ஓர் விசாரணைக் குழு அமைத்து, அக்குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி கட்டாயப் பயில்மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் இருக்கும் என்று ஆணையிட்டது.

    மெட்ரிக் பள்ளி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அந்த அரசாணை செல்லாது என்று கூறி விட்டது. இதற்கெதிராக தமிழக அரசு 1999இல் உச்ச நீதிமன்றத்தில் செய்த முறையீடு இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து தமிழுக்கு சாதகமான தீர்ப்புப் பெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மொத்தம் 3,600 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளைப் புகுத்துவதைத் தமிழக அரசு கைவிட்டு, ஆங்கிலம் உள்ளிட்ட எல்லாப் பாடங்களையும் தரமான முறையில் படிப்பிக்க ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறேன். இது தமிழ் மொழிக்கான கோரிக்கை மட்டுமன்று, சமூகநீதிக்கான கோரிக்கையும் ஆகும். ஏனென்றால் தமிழ்வழிக் கல்வியே ஒடுக்குண்ட மக்கள் சமச் சீர் கல்வி பெற்று மற்றவர்களுடன் போட்டியிடும் வல்லமையையும் தன்னம்பிக்கையையும் அம்மாணவர்களிடையே உருவாக்கும்.

    தமிழக அரசு ஆங்கிலவழி வகுப்புகளை விரிவாக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழ்வழிக் கல்விக்குத் தகுந்த முறையில் ஊக்கம் அளிக்கும் நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
  16. அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி முடிவை கைவிட வேண்டும்: வைகோ கோரிக்கை

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, தமிழ்வழிக் கல்விக்கு வேட்டு வைத்து, அன்னைத் தமிழ் மொழிக்கு பேராபத்தை ஏற்படுத்துவது ஆகும். வளர் தலைமுறை குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தமிழ்மொழியில் பயில்வதைவிட்டு, ஆங்கில மொழியில் பயில்வதற்கு ஊக்குவிப்புத் தந்து 'மெல்லத் தமிழ் இனி சாகும்; மேலை மொழியே இங்கு ஓங்கும்' எனும் பெரும் விபரீதத்துக்கு தமிழக அரசின் முடிவு வழிவகுக்கும்.

    கடந்த கல்வியாண்டில், 320 அரசுப்பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு ஆங்கில வகுப்புகள் தொடங்கப்பட்டன. மொத்தம் 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு 22,400 மாணவர்கள் படித்து வருகின்றார்கள். வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என்ற கல்வி அமைச்சரின் அறிவிப்பு தமிழுக்கும், தமிழ் பயிற்சி மொழிக்கும் பெரும் கேடு செய்யும்.

    அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிப் பிரிவுகளை ஆங்கிலவழிப் பிரிவுகளாக மாற்றும் அறிவிப்பை எதிர்க்கிற அனைவரும் ஆங்கில மொழிக்கோ ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக் கொள்வதற்கோ எதிரானவர்கள் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

    அண்ணல் காந்தி முதல் அறிஞர் அண்ணா வரை தாய்மொழியில் கல்வி பயில்வதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பலமுறை வலியுறுத்தியுள்ளனர்.

    தாய்மொழியை முதல் பயில்மொழியாகக் கொள்வதும் அதையே அனைத்துப் பாடங்களுக்குமான பயிற்றுமொழியாகக் கொள்வதும்தான் உலக நடப்பு. இரண்டாம் மொழியாக வேறொரு அயல்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெறலாம். நம்மைப் பொறுத்தவரை இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்போம், கசடறக் கற்போம் என்றுதான் சொல்கிறோம்.

    தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்கள் யாவரும் ஐந்தாம் வகுப்புக்குப் பிறகுதான் ஆங்கிலம் கற்றார்கள் என்பதே உண்மை. இதனால் அவர்கள் யாரும் ஆங்கில அறிவில் குறைந்துபோய் விடவில்லை.

    தனியார் பள்ளிகளோடு போட்டியிட்டு அரசுப் பள்ளிகளும் மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் பயிற்று மொழி என்பதை ஏற்பதற்கில்லை. அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க விடாமல் தடுப்பது எது? தமிழ்ப் பயிற்றுமொழிதானா?

    இங்கிலீஷ் மீடியம் வேண்டும் என பெற்றோர் விரும்புகிறார்கள் என்று பொதுமக்கள் மீது பழியைப் போடாமல், தமிழ்வழிப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தொடக்கப் பள்ளியில் மட்டுமல்லாமல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், ஏன் கல்லூரிப் படிப்பிலும் கூட, தமிழையே பயிற்றுமொழியாக்குவது போன்ற உருப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.

    அரசுப் பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கேரளத்தில் மலையாள வழிக் கற்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் தனி மதிப்பெண் கொடுப்பது போல் இங்கேயும் தமிழ்வழிப் படித்தவர்களுக்குப் பல சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும்.

    கடந்த 1998ஆம் ஆண்டு தமிழ்ச் சான்றோர் பேரவை முனைவர் தமிழண்ணல் தலைமையில் நடத்திய 102 தமிழுணர்வாளர்களின் உண்ணாவிரதப் போரட்டத்தின் முடிவில் அன்றைய தமிழக அரசு நீதிபதி மோகன் தலைமையில் ஓர் விசாரணைக் குழு அமைத்து, அக்குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி கட்டாயப் பயில்மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் இருக்கும் என்று ஆணையிட்டது.

    மெட்ரிக் பள்ளி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அந்த அரசாணை செல்லாது என்று கூறி விட்டது. இதற்கெதிராக தமிழக அரசு 1999இல் உச்ச நீதிமன்றத்தில் செய்த முறையீடு இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து தமிழுக்கு சாதகமான தீர்ப்புப் பெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மொத்தம் 3,600 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளைப் புகுத்துவதைத் தமிழக அரசு கைவிட்டு, ஆங்கிலம் உள்ளிட்ட எல்லாப் பாடங்களையும் தரமான முறையில் படிப்பிக்க ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறேன். இது தமிழ் மொழிக்கான கோரிக்கை மட்டுமன்று, சமூகநீதிக்கான கோரிக்கையும் ஆகும். ஏனென்றால் தமிழ்வழிக் கல்வியே ஒடுக்குண்ட மக்கள் சமச் சீர் கல்வி பெற்று மற்றவர்களுடன் போட்டியிடும் வல்லமையையும் தன்னம்பிக்கையையும் அம்மாணவர்களிடையே உருவாக்கும்.

    தமிழக அரசு ஆங்கிலவழி வகுப்புகளை விரிவாக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழ்வழிக் கல்விக்குத் தகுந்த முறையில் ஊக்கம் அளிக்கும் நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ReplyDelete
  17. arasu udhavi perum palligalilum english medium thoanga anumadhika vendum. andha palligalilum niraya manavargal padikirargal. lkg mudhal thodangavendum

    ReplyDelete
  18. those who are all refusing for this plan their children are studying in CBSE board or in abroad.they have the principle to restrict only to the middle class people those whose lives only with expectation and disappointment.we people make our children to study in the tamil medium (to save tamil)after their studies we are waiting only for the govt., job and their reservations for quota even in their age of 45. but those who are completing their studies or having knowledge of english they are getting good salary in their age of 23.Eventhough the students of tamil medium with good knowledge after completing their professional courses are getting poor salary only by the reason of lacking spoken in english.nobody is there to to give life them. but now the govt., is taking good decision to give life and through this they can uplift their lifestyle.congratulations and all the very best for this plan of our govt.,

    ReplyDelete
  19. Good decision in tamil nadu government.
    By jeeva

    ReplyDelete
  20. Good decision. This will help govt school students to excel in life.

    ReplyDelete
  21. Good and excellent decision, english medium thavaru endru sollupavarkal veetil tamil medium padika vaikirangala. Yezhai manavargalai vaithil adikathinga. English medium is best. This s samathuvam

    ReplyDelete
  22. Tamil medium school padikira veetula mattum veevatham panna sollunga. They are only eligible,others not allowed

    ReplyDelete
  23. kandipaga english medium vendum vendum vendum.

    ReplyDelete
  24. correct choice good plan go ahead dont hear the voice of any politician who is against for this scheme

    ReplyDelete
  25. I lost hindi because of some underplayed politicians. dear politicians kindly dont PLAY with my childs life. accept good changes. welcome to english medium.it is medium only not at all equel to mother tongue it wont replace over tamil. so dont worry about tamil.

    ReplyDelete
  26. east or west AMMA is best. Poor students m Eng. Med padika vaitha ammavuku great salute............

    ReplyDelete
  27. good decision taken by government we already lost our national language hindi by foolish politicians english only for communication
    those are didnt accept this admit your child and relative child in government tamil medium school then speak here

    ReplyDelete
  28. எங்கள் ஒரே மகனை தமிழ் வழிக்கல்வியில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்க வைத்து பொறியாளராக்கியிருக்கிறோம்.ஒரு ஸ்வீடன் கம்பெனியில் இங்கே தமிழ்நாட்டிலேயே நல்ல சம்பளத்துடன் பணிபுரிகிறார்.ஆங்கிலம் இந்தி இரு மொழிகளிலும் பேசி கம்பெனி வேலைகளில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.இன்னும்கூட சில மொழிகளைக்கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்.உடனடியான வேலை மற்றும் பைசாவுக்காக ஆங்கில வழிக்கல்வி வேண்டும் என்று குதிப்பது நீண்ட காலப்பார்வையற்ற ஒன்றாகும்.மொழி என்பது ஜஸ்ட் ஒரு மீடியம் அல்ல.அது நம் பண்பாட்டைச் சுமக்கும் மற்றும் பண்பாட்டைத் தகவமைக்கும் உயிர்ச்சக்தி ஆகும்.எல்லாப்பள்ளிகளிலும் தமிழ்வழிதான் இருக்க வேண்டும்.தனியார் பள்ளிகளின் ஆஙிலவழீக்கல்வி என்னும் பொருளாதார அரசியலுக்கு தமிழக அரசு சரணடையக்கூடாது.ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட நாடுகளைத்தவிர பிற எல்லா நாடுகளிலும் அவரவர் தாய்மொழிவழியேதான் அனைத்துப்பாடங்களும் உள்ளன.மத்திய மாநில அரசுகளின் ஏகாதிபத்திய அடிவரிடித்தனமான கல்விக்கொள்கைக்கு பெற்றோர்களாகிய நாமும் துணைபோகக்கூடாது.நிதானமாக யோசிக்க வேண்டும்.இப்படியே போனால் நம் வரும் தலைமுறை மொழியை இழக்கும்.அது என்னென்ன விளைவுகளைக்கொண்டுவரும் என்பதை அச்சத்துடன் பார்க்க வேண்டும்.தமிழா ஆங்கிலமா என்று நாம் பட்டிமன்றம் நடத்த வேண்டாம்.இது எதிர்கால தமிழ்ச்சமூகத்தின் வாழ்வாதாரமான பிரச்னை.குறுகிய பொருலாதார நலன்களுக்காக எதிர்காலத்தை நம் சந்ததிகள் இழக்க வேண்டுமா?

    ReplyDelete
  29. World la English eppadi mukkiyamo antha alavukku tamilum mukkiyam
    I Love Tamil language

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive