Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் தடையற்ற மின்சாரம்: மின்துறை அமைச்சர் அறிவிப்பு


             "பிளஸ் 2 தேர்வு முடிவை, எந்த பிரச்னையும் இன்றி மாணவர்கள் அறிவதற்காக, மாநிலம் முழுவதும், அனைத்துப் பள்ளிகளிலும், இன்று காலை, 9:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை, தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்" என மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார்.

             சட்டசபையில், நேற்று, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசுகையில், "பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை (இன்று) வெளியிடப்படுகின்றன. பள்ளிகளில் உள்ள இணையதளங்கள் வழியாகவும், தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

           இந்நேரத்தில், காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணிவரை, அனைத்துப் பள்ளிகளிலும், மின்தடை ஏற்படுத்தாமல், தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

                இதற்கு, மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் பதிலளிக்கையில், "பிளஸ் 2 தேர்வு முடிவை, எந்த பிரச்னையும் இன்றி, மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக, காலை, 9:00 மணியில் இருந்து, பிற்பகல், 1:00 மணி வரை, அனைத்துப் பள்ளிகளிலும், தடைஅற்ற மின்சாரம் வழங்கப்படும். இந்த நேரங்களில், பள்ளிகளில் மின்தடை இருக்காது" என, அறிவித்தார்.

              இன்று காலை, 10:00 மணிக்கு, தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. தேர்வுத்துறை அறிவித்துள்ள நான்கு இணையதளங்களில், தேர்வு முடிவை, மாணவர்கள் அறியலாம். மேலும், அனைத்து நூலகங்களிலும், இணையதளம் வழியாக, தேர்வு முடிவை அறிய, நூலகத்துறை ஏற்பாடு செய்துள்ளது. பள்ளிகளில், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு பட்டியலை, வெளியிடவும், தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive