Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொறியியல் விண்ணப்ப தேதியை நீட்டிக்க முடியாது: உயர்கல்வி அமைச்சர்


               "சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாகாததால், அண்ணா பல்கலைக் கழகத்தில் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க முடியாது" என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
 
               சட்டசபையில் நேற்று நடந்த மானியக் கோரிக்கையின் போது, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., வெங்கடேசன், "அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க, இம்மாதம், 20ம் தேதியே, கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்திருந்தாலும், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. எனவே, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க முடியுமா?" என்றார்.

                 அதற்கு பதில் அளித்த, உயர்கல்வித்துறை அமைச்சர், பழனியப்பன் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின் படி, மே மாதம், 20 க்குள் விண்ணப்பித்து, ஜூன் 5க்குள் ரேண்டம் எண் தயாரிக்க வேண்டும். ஜூலை 30க்குள் மாணவர் சேர்க்கை முடித்து, ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள், வகுப்புகளை துவக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.

              அதற்காகவே, 15 நாட்களுக்கு முன்னர், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்றாலும், மாணவர்கள், தங்களின் தேர்வு எண், ஜாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வைத்து விண்ணப்பிக்கலாம்.

                        ஜூன் 5 க்குள், சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாகலாம். அதற்காக, விண்ணப்பிக்கும் தேதியை, நீட்டிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive