Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை


                பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.
 
                சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
 
                 விவாதத்தில் உறுப்பினர் பாலபாரதி பேசுகையில், பல தனியார் பள்ளிகளில் அதிக கல்விக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை பணமாக இல்லாமல் வங்கிக்கணக்கு மூலம் செலுத்தும் நிலை இருந்தால் எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது? என்பதற்கு அது ஆதாரப்பூர்வமாக இருக்கும். பிளஸ்–2 தேர்வில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ–மாணவிகளே ரேங்க் எடுக்கிறார்கள். காரணம் பல தனியார் பள்ளிகளில் பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்துகிறார்கள் என்று குறிப்பிட்டார்.அதற்கு பதில் அளித்த அமைச்சர் வைகைச் செல்வன், ‘‘ உறுப்பினர் கூறுவதைப் போல எந்த பள்ளியிலும் பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடம் நடத்தப்படவில்லை. அதுபோன்று பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும். அதேபோல், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றன. சென்னையில் ஒருசில பள்ளிகளின் அங்கீகாரம் கூட நிரந்தரமாக ரத்துசெய்யப்பட்டு உள்ளது’’ என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive