பத்தாம் வகுப்பு கணித பாட தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 10 மதிப்பெண் கூடுதலாக வழங்க ( Grace Mark ) பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு கணித பாட தேர்வு வழக்கத்திற்கு மாறாக ப்ளுபிரின்ட் படி இல்லாமலும், நேரடி கேள்வியாக இல்லாமலும் சற்று குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறையும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு கருத்து கூறியிருந்தனர்.
இவர்களின் கருத்தை கேட்டறிந்த கல்வித்துறை இது குறித்து ஆலோசித்து 10 ஆம் வகுப்பு கணித பாடத்திற்கு 10 மதிப்பெண் கூடுதலாக வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்துக்கு 10 மார்க் போனஸ்
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கணித வினாத்தாளில் பகுதி1ல் 15 ஒரு மதிப்பெண் கேள்விகள்,பகுதி 2ல் 10 இரண்டு மதிப்பெண் கேள்விகள், பகுதி 3ல் 9 ஐந்து மதிப்பெண் கேள்விகள், பகுதி 4ல் 2 பத்து மதிப்பெண் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இதில் பகுதி 3ல் கேட்கப்பட்ட 5 மதிப்பெண் கேள்விகள் ப்ளூ பிரிண்ட் அடிப்படையில் கேட்கப்படவில்லை. அதிலும் சில கேள்விகள் கடினமாக இருந்தன. கட்டாயமாகஎழுத வேண்டிய 45வது கேள்வியில், பாடப்புத்தகத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கணிதத் தேர்வில் அதிகப்படியான மாணவர்கள் தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டது. சென்டம் எடுப்பவர்கள் எண்ணிக்கையும் குறையும் என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது. இதில் கணித பாடத்திற்கு கொடுக்கப்பட்ட ‘ஆன்சர் கீயில்‘ 2 ஐந்துமார்க் வினாக்களுக்கு போனசாக 10 மார்க் கொடுக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மொத்தம் எழுத வேண்டிய 9 கேள்விகளில் 7 கேள்விகள் சரியாக எழுதி, 2 கேள்விகள் தவறாக எழுதியிருந்தால் 10 மார்க் போனசாக வழங்க வேண்டும் அல்லது 2 கேள்விகளுக்கு மட்டும் குறைவாக மார்க் பெற்றிருந்தாலும் முழுமையான 10 மார்க் வழங்கப்படும். இவ்வாறு தேர்வுத்துறையினர் வழங்கிய ‘கீயில்‘ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்ச்சி விகிதமும், சென்டம் எடுப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.
மாணவர்கள் நலன் கருதி போனஸ் மதிப்பெண் வழங்கிய தமிழக அரசுக்கும், பள்ளி கல்வி துறைக்கும் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தகவல்களை தொகுத்து வழங்கிய திரு. சுகுமார், தலைமையாசிரியர் விளை, திருவண்ணாமலை மாவட்டம், அவர்களுக்கும், திரு. முருகவேல், விழுப்புரம் மாவட்டம் அவர்களுக்கும் பாடசாலை நன்றி தெரிவித்துகொள்கிறது.
thank u very much
ReplyDelete