Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"விடைத்தாள் அனுப்பும் போது பறக்கும் படை உடனிருக்க வேண்டும்"


          "பத்தாம் வகுப்பு விடைத்தாள்களை தபால் அலுவலகம் மூலம் அனுப்பும் பணியின் போது கல்வி அதிகாரிகளுடன், பறக்கும் படை ஆசிரியர் களும் கடைசி நிமிடம் வரை இருந்து கண்காணிக்க வேண்டும்" என்று, மதுரை மாவட்ட தேர்வு பார்வையாளர் சங்கர் (டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர்) தெரிவித்துள்ளார்.

        மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான, பறக்கும் படை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளியில் நேற்று நடந்தது. சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,க்கள், பறக்கும் படையை சேர்ந்த 130 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

          மதுரை மாவட்ட தேர்வு பார்வையாளர் சங்கர் அறிவுறுத்தியதாக ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: விடைத் தாள்களை சம்பந்தப்பட்ட திருத்தும் மையங்களுக்கு அனுப்பும் போது துறை அலுவலர், கூடுதல் அலுவலருடன் இனிமேல் பறக்கும் படை பிரிவு ஆசிரியர்களும் கடைசி நிமிடம் வரை இருந்து கண்காணிக்க வேண்டும். பண்டல்கள் "மிஸ்" ஆகாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

          தபாலில் அனுப்பப்பட்ட பண்டல்களின் எண்ணிக்கை குறித்து, "கஸ்டோடியன்" மையங்களுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.

             ஆலோசனை கூட்டத்தில் சங்கர் பேசுகையில், "மதுரையில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் இதுவரை மாணவர்கள் "பிட்" எழுதியதாக புகார் இல்லை. இது ஆரோக்கியமானது. பொது தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு நடத்தும் தேர்வுகளில் "பிட் கலாசாரம்" இல்லை என்றால், பொது தேர்விலும் "பிட்" பிரச்னை வராது" என்று அறிவுறுத்தினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive