கரும்பலகையில் உள்ள எழுத்துக்களை தானே அழிக்கும்
இயந்திரத்தை (டஸ்டர்) மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி மாணவர்கள்
உருவாக்கியுள்ளனர்.
இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து மாணவர்கள்
கூறியதாவது: இக்கருவி மிக சிறிய "டி.சி.", பேட்டரிகள் உதவியுடன்,
சுழலக்கூடிய உருளையும், கரும்பலகையின் மேற்பரப்பினை துடைக்கும் வகையில்
"ஸ்பான்ச்" அடைப்பையும், தூசியை உறிஞ்சி உள்வாங்கும் வகையில்
வெற்றிடத்தையும் கொண்டுள்ளது. "ஸ்பான்ச்" பரப்பு மூலம் கரும்பலகையை
துடைக்கும்போது எழும் தூசியை, இயந்திரத்தில் உள்ள "இம்பெல்லரின்"
உதவியுடன், காற்று அழுத்த வேறுபாட்டால் உள்வாங்கப்படுகிறது.
பின், இத்தூசி, இயந்திரத்தின் பின்புறம் உள்ள மூடியினை
சுற்றி எளிதாக அப்புறப்படுத்த முடியும். "டி.சி.", மோட்டாரினை 6 வோல்ட் ரீ
சார்ஜர் பேட்டரி மூலம் இயக்கலாம். இக்கண்டுபிடிப்புக்கு மத்திய, மாநில
அரசுகளின் விருதுகள் கிடைத்துள்ளன. காப்புரிமைக்கும்
விண்ணப்பிக்கப்பட்டுள்ளது, என்றனர். தொடர்புக்கு: 96003 75600
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...