Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: ஏப்ரல் 19 வரை கோரிக்கைகளை அனுப்பலாம்


            சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம்  மே 15-ம் தேதி நடைபெற உள்ளது.
 
 
           இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள ஓய்வூதியதாரர்கள், தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை வரும் 19-ம் தேதிக்குள் அனுப்புமாறு  மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

         இது குறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

           ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவர்களுக்கான குறைதீர்க் கூட்டம் மே 15-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

                சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட  ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 32, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரிக்கு ஏப்ரல் 19ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

              ஓய்வூதியதாரர் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஓய்வு பெற்றபோது பணிபுரிந்த அலுவலகம், ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய புத்தக எண் உள்ளிட்ட  விவரங்களை கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive