Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வி உதவி: ஜப்பானுக்கு இந்திய கல்வியாளர் கோரிக்கை

 
      "இந்தியாவை சேர்ந்த, ஏழை மாணவர்களின் கல்விக்கு, ஜப்பான் அரசு உதவ வேண்டும்" என, இந்தியாவை சேர்ந்த கல்வியாளர் ஆனந்த் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

     ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் வகையில், 2002ல், பீகாரில், "சூப்பர் 30" என்ற கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த கல்வி திட்டத்தின் தலைவரான ஆனந்த் குமார், ஜப்பான் அரசின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

      ஜப்பான் அரசின், அறிவியல் துறை ஆலோசகரை, ஆனந்த் குமார் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்கு, ஜப்பான் அரசு உதவ வேண்டும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், பொருளாதார வசதி கொண்ட இந்திய மாணவர்களை, தங்கள் நாட்டில் கல்வி பயில அழைக்கின்றன.

          இந்தியாவின் ஏழை மாணவர்கள், உயர் கல்வி பெற, ஜப்பான் உதவினால், திறமையான மாணவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

             ஜப்பானில் கல்வி பயில செல்லும், 1.4 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில், இந்திய மாணவர்கள் எண்ணிக்கை, 600 மட்டுமே. இந்திய மாணவர்களுக்கு உதவினால், வரும், 2020க்குள், மூன்று லட்சம் மாணவர்கள், ஜப்பானில் கல்வி பெற முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive