Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"ஒழுக்கம் இல்லாத கல்வியறிவு சமுதாயத்திற்கு தீமை விளைவிக்கும்"

      காந்தி கிராமம்: "ஒழுக்கம், நல்ல சிந்தனைகள் இல்லாத கல்வியறிவும், திறமைகளும் சமுதாயத்திற்கு, நன்மையை விட அதிகமான தீமையை விளைவிக்கும்" என காந்திகிராம பல்கலை வேந்தர் ரீனா ஜாப்வாலா பேசினார்.
       காந்திகிராம பல்கலையில் 29 வது பட்டமளிப்பு விழா நடந்தது. துணைவேந்தர் ராமசாமி வரவேற்றார். பதிவாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். பட்டங்களை வழங்கி பல்கலை வேந்தர் ரீனா ஜாப்வாலா பேசியதாவது:
         பல்கலை பட்டம் பெறும் மாணவர்கள், சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக, புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும். பட்டப்படிப்பின் மூலமாக, வாழ்நாள் முழுவதும் பயன்தரக் கூடிய தனித்திறன்களை, அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். எளிமையை வாழ்வில் கடைபிடித்து ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும்.
          மனிதர்கள் தங்கள் தேவைகளை அதிகரித்து கொண்டே சென்றதால்தான், உலக வெப்பமயமாகுதல், ஓசோன் படலம் பாதிப்பு என்பது போன்ற, உலகை அச்சுறுத்தும் பிரச்னைகள் எழுந்துள்ளன. நாம் அவரவர் குடும்பத்திற்காக உழைக்கிறோம். இதேசமயம், நாம் சார்ந்துள்ள சமுதாயத்தின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும், நம்மால் இயன்ற அளவு சேவை செய்ய வேண்டும்.
         அனைத்திற்கும் மேலாக, ஒழுக்கம், நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியம். இவை இல்லாத கல்வியறிவும், திறமைகளும் சமுதாயத்திற்கு, நன்மைகளை விட அதிகமாக தீமைகளை விளைவிக்கும், என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive