ஆங்கில மோகத்தின் நடுவே, மாணவர்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய
கீதம், தேசிய பாடல்கள் கற்று கொடுத்து, அனைவரும் தடையின்றி தமிழ் இசை
பாடல்களை தெரிந்து கொள்ள, தமிழகத்தில் முதன்முறையாக ராமநாதபுரம்
மாவட்டத்தில் இசைப்பள்ளி மூலம் பயிற்சி வழங்கி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் கூறியதாவது: பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக தமிழ் இசைப்பாடல்களை தெரிந்து இருக்க வேண்டும். அதற்கான பயிற்சிகளை அளிக்க, அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நாங்கள் முதற்கட்டமாக சேதுபதி நடுநிலைப்பள்ளியில், 60 மாணவர்கள், மன்னர் மெட்ரிக் பள்ளியில், 50 மாணவர்கள் என, 110பேருக்கு கடந்த 10.10.2012 முதல் 10.1.2013 வரை இசையுடன், பாடல்கள் கற்றுகொடுத்தோம்.
தற்போது, 110 மாணவர்களும் நன்கு பாட கற்றுகொண்டுள்ளனர். அடுத்த கட்ட பயிற்சி துவங்கப்பட உள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழ் இசைப்பாடல் கற்றுத்தர உள்ளோம், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...