Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உ.பி.,யில் 15 லட்சம் பேருக்கு லேப்-டாப் வழங்க அனுமதி


              தமிழகத்தைப் போலவே, உ.பி.,யிலும், மாணவர்களுக்கு இலவச, லேப்-டாப் வழங்குவதற்கு, அம்மாநில அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

          தமிழகத்தில், அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக, லேப்-டாப்கள் வழங்கப்படுகின்றன. இதைப் பின்பற்றி, உ.பி.,யில், கடந்த சட்டசபை தேர்தலின் போது, "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக, லேப்-டாப் வழங்குவோம்" என, சமாஜ்வாதி கட்சி அறிவித்தது.

           இதன் பின் நடந்த தேர்தலில், சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்று, அக்கட்சியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ், முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், அகிலேஷ் யாதவ் அரசு, தீவிரம் காட்டி வருகிறது.

           இதையடுத்து, நேற்று நடந்த, மாநில அமைச்சரவை கூட்டத்தில், 15 லட்சம் லேப்-டாப்கள் வாங்குவதற்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, எச்.பி., இந்தியா சேல்ஸ் நிறுவனத்திடமிருந்து, இந்த லேப்-டாப்கள் வாங்கப்படவுள்ளன. "இன்னும் ஓரிரு மாதங்களில், மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கும் பணி, படிப்படியாக துவங்கும்" என, மாநில அரசு அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive