Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்வித்துறை உத்தரவால் தனித் தேர்வர்களுக்கு சிக்கல்?

      பழைய பாடத் திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் இந்த ஆண்டு, தனித் தேர்வர்களாக பரீட்சை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு கல்வித் துறையின் திடீர் அறிவிப்பே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் எஸ்.எஸ். எல்.சி., வரை சமச்சீர் கல்வி அமலில் உள்ளது. இதனால் பழைய பாட திட்டத்தின் கீழ் 2010ல் எஸ்.எஸ்.எல்.சி., வரை தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத ஆர்வம் காட்டவில்லை. 

இவ்வாறு தேர்வு எழுதுபவர்கள் சமச்சீர் கல்வி முறையின் கீழ் உள்ள செய்முறை தேர்வு எழுத வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் அறிவியல் பாடத்திற்கான செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டியுள்ளது. 

மேலும் செய்முறை வகுப்பில் கலந்து கொள்ளாதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு செய்முறை தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முறையாக பயிற்சி வகுப்புகள் நடத்தாததால் பலர் அறிவியல் பாடத்தில் தோல்வியை தழுவினர். 

இதனால் இந்த ஆண்ட அரசு செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்கள் மட்டுமே வரும் மார்ச் மாதம் நடக்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி., அறிவியல் தேர்வில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive